Prayers

விசுவாசப் பிரமாணம்
பரலேகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய
சருவேசுரனை விசுவசிக்கின்றேன்.
அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய
நாயகன் இயேசுகிறிஸ்துவையும்
விசுவசிக்கின்றேன்.
இவர் பரிசுத்த ஆவியினால் கற்பமாய் உற்பவித்து
கன்னிமரியாளிடம் இருந்து பிறந்து போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு
சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடம் இருந்து
உயிர்த்தெழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.
அவ்விடத்திலிருந்து
சீவியரையும் மரித்தவரையும் நடுதீர்க்கவருவார்.
பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.
பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.
புனிதர்களின் சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்.
பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன்.
சரிர உத்தானத்தை விசுவசிக்கின்றேன்.
நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன்.
ஆமென்.