Prayers

துயர மறையுண்மைகள்

1)இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக நாம் மனத்துயர் அடையச் செபிப்போமாக.
2) இயேசு கல் தூனில் கட்டுண்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து, நம் புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்டு செபிப்போமாக.
3) இயேசு முள்முடி தரித்ததை தியானித்து, நம்மையே ஒடுக்கவும், நமக்கு நேரிடும் நிந்தை அவமானங்களையும் தோல்விகளையும் ஏற்கவும் செபிப்போமாக.
4) இயேசு சிலுவைச் சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமைகளைப் பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக.
5) இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்டதைத் தியானித்து, நாம் இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் செபிப்போமாக.

Holydivine