Prayers

Infant Jesus

அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் . . . . . . (உறுதியோடு கேட்கும்) இந்த வரத்தை அளித்தருளுமாறு பணிவாக உம்மை கேட்கிறோம். எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும் வேதனைச் சோதனைகளையும் நீக்கி, உமது திருக்குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று, தந்தையோடும், தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக. ஆமென்.

குழந்தை இயேசுவுக்கு புகழ்மாலை
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும் — கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் — கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சிஷ்ட தமத்திருத்துவமாகியிருக்கிற ஏக சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
அற்புதக் குழந்தையாகிய இயேசுவே - எங்கள் மேல் இரக்கமாயிரும். 

வியத்தகு முறையில் செயல்படும் ஒப்பற்ற வல்லமையுடைய குழந்தை இயேசுவே - எங்கள் மேல் இரக்கமாயிரும்

எங்கள் எண்ணத்தையும் உள்ளத்தையும் ஆய்ந்தறியும் ஞானமுடைய குழந்தை இயேசுவே

எங்களுக்கு உதவிட என்றும் விரைந்துவரும் நன்மனமுடைய குழந்தை இயேசுவே

வாழ்க்கையின் முடிவுக்கும், கடைசி கதிக்கும் உமது பராமரிப்பால் எங்களை நடத்திச் செல்லும் குழந்தை இயேசுவே

உமது உண்மையின் ஒளியால் எங்கள் இதயத்தின் இருளை ஓட்டும் குழந்தை இயேசுவே

எங்கள் வறுமையை ஒளிக்கும் கொடை வள்ளலாகிய குழந்தை இயேசுவே

துன்புறுவோரைத் தேற்றும் நட்புறவுடைய குழந்தை இயேசுவே

உமது இரக்கத்தால் எங்கள் பாவங்களை மன்னிக்கும் குழந்தை இயேசுவே

எங்களைத் திடப்படுத்தும் வல்லமையுடைய குழந்தை இயேசுவே
தீமைகளை எல்லாம் அகற்றும் ஆற்றலுடைய குழந்தை இயேசுவே 

உமது நீதியால் பாவத்திலிருந்து எங்களைத் தடுத்தாட்கொள்ளும் குழந்தை இயேசுவே

நரகத்தை வெல்லும் திறமையுள்ள குழந்தை இயேசுவே

எங்கள் இதயங்களைக் கவரும் எழில் வதனமுள்ள குழந்தை இயேசுவே

உம் கையில் உலகத்தை ஏந்தும் பேராற்றலுள்ள குழந்தை இயேசுவே

ஆர்வமற்ற எங்கள் உள்ளங்களை உமது அன்புத் தீயால் பற்றி எரியச் செய்யும் குழந்தை இயேசுவே 

எல்லா நன்மைகளாலும் எங்களை நிரப்பும் குழந்தை இயேசுவே

ஆசீரை அளிக்கின்ற அற்புத கரமுள்ள குழந்தை இயேசுவே

பக்தர்களின் உள்ளங்களை மகிழச்செய்யும் இனிய பெயருடைய குழந்தை இயேசுவே

உலகை எல்லாம் நிரப்பும் மாட்சிமையுள்ள குழந்தை இயேசுவே - எங்கள் மேல் இரக்கமாயிரும்
கருணை கூர்ந்து — எங்களைப் பொறுத்தருளும் இயேசுவே,

கருணை கூர்ந்து — எங்கள் மன்றாட்டைக் கனிவாய் கேட்டருளும் இயேசுவே.

எல்லாத் தீமையிலிருந்து — எங்களை மீட்டு இரட்சித்தருளும் இயேசுவே.

எல்லாப் பாவத்திலிமிருந்து, அளவற்ற உம் நன்மைக்கு எதிராக எழும் எல்லா அவ நம்பிக்கையிலுமிருந்து — எங்களை மீட்டருளும் இயேசுவே.

அற்புதம் புரியும் உமது ஆற்றலுக்கு எதிராக எழும் எல்லாசந்தேகத்திலுமிருந்து — எங்களை மீட்டருளும் இயேசுவே.

உமது வழிபாட்டில் ஏற்படும் எல்லாக் குறைபாட்டிலுமிருந்து — எங்களை மீட்டருளும் இயேசுவே.

எல்லாத் தீமையிலும், கேட்டிலுமிருந்து — எங்களை மீட்டருளும் இயேசுவே.

உமது கன்னித்தாய் தூய மரியாள், வளர்ப்பு தந்தை தூயசூசையப்பர் இவர்களின் பரிந்துரை வழியாக எங்களை நீர் மன்னிக்க வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம்.
உமது திருக்குழந்தைப் பருவத்தின் பால் எங்களுக்குள்ள அன்பையும், பக்தியையும் காத்து வளர்த்திட வேண்டும் என்று — உம்மை மன்றாடுகிறோம். 

அற்புத உம் திருக்கரம் எங்களை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம்.

எண்ணற்ற உமது நன்மைகளை நாங்கள் என்றும் மறவாதிருக்க வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம். 

உமது திரு இருதய அன்பால் எஙகள் உள்ளங்களை மேன்மேலும் பற்றி எரியச்செய்ய வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கையோடு உம்மை கூவியழைப்போரின் குரலுக்குக் கனிவாய்ச் செவிமடுக்க வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம். 

எங்கள் நாடு அமைதியலே நிலைத்திருக்க அருள்தர வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம்.

எல்லாத் தீமையிலிருந்தும் எங்களை விடுவித்தருள வேண்டுமென்று — உம்மை மன்றாடுகிறோம்.
உமது பக்தியிலே நிலைத்திருக்கும் அனைவருக்கும் நித்திய வாழ்வை அளித்தருள வேண்டும் என்று - உம்மை மன்றாடுகிறோம்
பொதுத்தீர்வை நாளிலே இரக்கத்துடன் எங்களுக்கு தீர்ப்பிட வேண்டும் என்று - உம்மை மன்றாடுகிறோம்
உமது அற்புத திருச்சுரூபத்திலே எங்களுக்கு ஆறுதலாகவும், அடைக்கலமாகவும் நீர் இருக்க வேண்டும் என்று - உம்மை மன்றாடுகிறோம்
இறைமகனே, மரிமகனே, இயேசுவே - உம்மை மன்றாடுகிறோம்
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் குழந்தை இயேசுவே.
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் குழந்தை இயேசுவே.
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் மேல் இரக்கமாயிரும் குழந்தை இயேசுவே.

செபிப்போமாக இறைவா, விண்மீன் வழி நடத்த / உம் திருமகனை அனைத்துலக மக்களுக்கும் வெளிப்படுத்தினீர். / ஆற்றலும் அன்பும் நிறைந்த உம் திருமகன் / எம்மோடு இருக்கிறார் என்பதை விசுவாசத்தால் ஏற்றுக் கொள்ளும் நாங்கள்,/ வாழ்க்கையில் வரும் தடைகளையெல்லாம் கடந்து, / உமது மகத்துவத்தின் அழகைக் கண்டு களித்திட / எங்களை அழைத்துச் செல்வீராக./ எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். — ஆமென்.

Holydivine