Prayers

Infant Jesus

வல்லமை மிகுந்த இயேசுவே, சிலுவையில் நீர் கொண்டிருந்த எல்லா ஆசைகளோடும் ,எனது ஆசைகளையும் ஒன்றினைத்து உம்மை கூவி அழைத்து ஏழை பாவிகளுக்காக உமது இரக்கத்தை கெஞ்சி கேட்கின்றேன். அணை கடந்த அருள் பொங்கி வழியும் மகா பரிசுத்த திரு இருதயமே உமது பாடுகளை முன்னிட்டு உம் அன்பால் மீட்ட ஆன்மாக்களின் இழப்பை அனுமதியாதேயும். இயேசுவே ஒவ்வொரு ஆன்மாவும் உமது பாடுகளின் மீதும் இரக்கத்தின் மீதும் நம்பிக்கை வைக்கட்டும். நீர் உமது இரக்கத்தை எவர் ஒருவருக்கும் மறுப்பதில்லை. வானமும் பூமியும் மாறலாம். ஆனால் உமது இரக்கம் அழிந்து போவதில்லை. இயேசுவே! முடிவில்லா காலமும் உமது இரக்கத்தை மகிமை படுத்தும்படி நான் எல்லா பாவிகளையும் உமது திருப்பாதம் கொண்டு வருகிறேன். உலகம் முழுவதற்க்குமாய் உமது இரக்கத்தை இரஞ்சுகிறேன்.

யேசுவே! நீர் மரித்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும் , இரக்கத்தின் கடலுமாகவும் வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே ! கண்டுபிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே ! உலகம் முழுவதையும் உம்முன் அடக்கி உமது இரக்கம் முழுமையும் எம்மீது பொழிந்தருளும்.

யேசுவின் இதயத்திலிருந்து இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

விசுவாச பிரமாணம்.

கர்த்தர் கற்பித்த செபம்.

மங்கள வார்த்தை செபம் (3 முறை )

செபமாலையின் பெரிய மணியில்:
நித்திய பிதாவே! எங்களாண்டவரும் , உமது நேசமகனுமான இயேசு கிறிஸ்துவின் உடலையும் உதிரத்தையும் ஆன்மாவையும், தெய்வீகத்தையும் எங்கள் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.

செபமாலையின் சிறிய மணியில் :
அவரது வேதனை நிறைந்த பாடுகள் வழியாக — எம்மீதும் ,அகில உலகின் மீதும் இரக்கமாயிரும்.
ஒவ்வொரு பத்து மணி செபமும் கீழ்கண்ட கருத்துக்களுக்காகச் சொல்லப்பட வேண்டும்.
1. இயேசு இரத்த வியர்வை வியர்த்ததை தியானிப்போமாக.
2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிபட்டதை தியானிப்போமாக.
3. இயேசுவின் தலையில் முள்முடி சூட்டப்பட்டதை தியானிப்போமாக.
4. இயேசு சிலுவை சுமந்து சென்றதை தியானிப்போமாக.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை தியானிப்போமாக.
புனித இறைவா! புனித எல்லாம் வல்லவரே! புனித நித்தியரே ! எங்கள் மீதும் அகில உலகின் மீதும் இரக்கமாயிரும். ( 3 முறை)
இரக்கமுள்ள இயேசுவே! உம்மை நாங்கள் விசுவசிக்கிறோம். உம்மில் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம். எங்கள் பலவீனத்திலும் இயலாமையிலும் எங்களுக்கு உதவியாக வாரும். நீர் எல்லோராலும் அறியப்படவும், நேசிக்கப்படவும் செய்ய எங்களுக்கு வரந்தாரும். அணைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும், உமது மகிமைக்காகவும் எங்கள் மீட்புக்காகவும் , உலகிலும் எம்மிலும் உள்ள தீய சக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரம் அருளும்.

ஆன்மாக்களுக்காக செபம்:

ஆண்டவரே! உமது எல்லையற்ற அன்பினால் எல்லாப் பாவிகளையும் மன்னித்து உமது நீதியின் வழிக்கு நடத்திச் செல்லும். இவர்களையும், இவர்களுடையவர்களையும், தீமையின் கொடுமையினின்று பாதுகாத்தருளும். தீமை செய்த அனைவரையும் மீட்டருளும். இறைவனின் இரக்கம் அவர்கள் மேல் இருப்பதாக. என் தேவனே! எனது இறைவனும் எனது அனைத்தும் ஆனவரே! என் யேசுவே இரக்கமாயிரும். இயேசு கிறிஸ்துவே! இரக்கத்தின் அரசே! நான் உம்மை நம்புகிறேன். யேசு , மரி , சூசை நான் உங்களை அன்பு செய்கிறேன். ஆன்மாக்களை மீட்டருளும். - ஆமென்.

இரக்கத்தின் பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும் — கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும் — சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் — கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
தமத்திருத்துவமாகியிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சிஷ்ட மரியாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தை மீட்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே — இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறோம்.
சகலமும் படைக்கப்பட காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - இயேசுவே என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறோம்
எங்களை தினமும் அர்ச்சிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
மகாப்பரிசுத்த திருத்துவத்தின் பரம இரகசியத்தை எங்களுக்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
கடவுளின் சர்வ வல்லமையை மானிடர்க்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
பரலோக அரூபிகளைப் படைக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை உருவாக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
உலகம் முழுவதையும் பரிபாலிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
எங்களுக்கு நித்திய வாழ்வை அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
நாங்கள் அடையவிருக்கும் தண்டனைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றி வரக் காரணமாயிருக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
பாவச் சேற்றிலிருந்து எங்களை மீட்டுக் கைத்தூக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
மனித அவதாரத்தையும் பாடுகளையும் மரணத்தையும் ஏற்றுக்கொள்ளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
சகல மனிதர்க்கும் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் உதவியளிக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
உமது அருட்கொடைகளை முன்னதாகவே எங்களுக்கு அருள காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
தெய்வீகப் பரம இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் துலங்கச்செய்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
சத்தியத் திருச்சபையை ஸ்தாபித்ததில் நீர் காட்டிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
அருட்சாதனங்களின் கொடைகளில் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
ஞானஸ்நானத்திலும் பட்சாதாபத்திலும் நீர் அருளும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
திவ்விய நற்கருணையிலும் குருத்துவத்திலும் நீர் தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
பாவிகளை மனம் திருப்புவதில் நீர் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
அவிசுவாசிகள் ஒளி பெறுவதில் நீர் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
நீதிமான்களின் அர்ச்சிப்பில் நீர் வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
உமது திருக்காயங்களிலிருந்து சுரந்தோடிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
உமது மகாப்பரிசுத்த திரு இருதயத்திலிருந்து சுரக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
இரக்கத்தின் தாயாகிய புனித மரியம்மாளை எங்களுக்கு தரக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
நோயாளிகளுக்கும் துன்பப்படுவோர்க்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
நொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
கதிகலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
மரிப்போரின் அடைக்கலமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
சகலப்புனிதர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
மீட்கப்பட்டவரின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -
அற்புதங்களின் வற்றாதத் துணையாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே -

உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களை போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே
— எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

முதல்வர்: ஆண்டவருடைய இரக்கங்கள், அவருடைய சகல படைப்புகள் பேரிலும் உள்ளன.
துணை: ஆதலால் ஆண்டவருடைய இரக்கத்தை என்றென்றைக்கும் பாடுவேன்.

செபிப்போமாக
மகாத் தயை நிறை இறைவா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே ! உம்மில் விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே. உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் எல்லா சோதனைகளிலும் , உமக்கு பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் அருட்கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும் எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்கு தந்தருளும். ஆமென்.

Holydivine